ETV Bharat / state

நரிக்குறவர்களுக்கான தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்கள்

சைதாப்பேட்டையிலுள்ள கோட்டூர் ஜிப்ஸி காலனியில் வசிக்கும் நரிக்குறவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் முகாமினை அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

author img

By

Published : Jul 13, 2021, 8:05 AM IST

நரிக்குறவர்களுக்கான தடுப்பூசி முகாம்: அமைச்சர்கள் தொடங்கி வைப்பு
நரிக்குறவர்களுக்கான தடுப்பூசி முகாம்: அமைச்சர்கள் தொடங்கி வைப்பு

சென்னை: சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியிலுள்ள கோட்டூர் ஜிப்ஸி காலனியில் வசிக்கும் நரிக்குறவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் முகாமினை நகர்ப்புற வளர்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், "தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் தடுப்பூசிகள் செலுத்துவதில் மிகப் பெரிய அளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.

விழிப்புணர்வை ஏற்படுத்திய நல்ல நோக்கம் நிறைவேறி இருப்பதால், தமிழ்நாட்டில் இதுவரை 1 கோடிய 62 லட்சத்து 61ஆயிரத்து 985 பேருக்குக் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கையிருப்பில் 7 லட்சத்து 53ஆயிரத்து 280 தடுப்பூசிகள் உள்ளன.

தடுப்பூசி முகாம்:

முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி ஜூலை மாதத்துக்குரிய தொகுப்பினை விரைந்து பெறுவதற்கு சுகாதாரத் துறையின் செயலாளரை டெல்லிக்கு அனுப்பி இரண்டு நாள்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டு, ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை அலுவலர்களைச் சந்தித்து வலியுறுத்தியதால், தமிழ்நாட்டிற்குத் தடுப்பூசிகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியிலுள்ள கோட்டூர் ஜிப்ஸி காலனியில் 200க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வசிக்கின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்குத் தொழில் நிமித்தமாக நரிக்குறவர்கள் சென்றுவருவதால், அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளித்திட வேண்டுமென நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு வலியுறுத்தியதன் அடிப்படையில், அவரது முன்னிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையும், சென்னை மாநகராட்சியும் இணைந்து தடுப்பூசி முகாமை இப்பகுதியில் தொடங்கியுள்ளது.

தடுப்பூசி முகாம்
தடுப்பூசி முகாம்

33 மாவட்டங்களில் கள ஆய்வு:

தமிழ்நாடு முழுவதும் இருக்கிற மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நானும், சுகாதாரத் துறையின் செயலாளரும் சென்று கள ஆய்வை நடத்தியிருக்கிறோம். மருத்துவமனைகளில் இருக்கக்கூடிய டயாலிசிஸ், கார்டியோலாஜி போன்ற பிரிவுகளுக்கும் சென்று ஆய்வு செய்துள்ளோம். கரோனா நோயைத் தாண்டி பிற நோய்களுக்கும் சிறப்பான கிசிச்சையளிக்க மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தியிருக்கிறோம்.

முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு நீண்ட நாள்களாகப் படுத்திருந்து புண் வந்து பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு உரிய தீவிர சிகிச்சைகள் அளிக்க அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்துவோம். நேற்றுதான் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க ஓர் ஆராய்ச்சி மையம் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை இத்துறை சார்ந்த மருத்துவத் தோழியரிடமிருந்து வந்துள்ளது.

18 வகையான பொருள்கள் அடங்கிய கிட்:

அங்கு மருத்துவக் கல்லூரி இயக்குநர், பொதுச்சுகாதாரம், நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் ஆகியோரிடமும் அரசு மருத்துவமனையோடு சேர்ந்து இயங்குவதற்கான அவரது விருப்பத்தினைத் தெரிவித்தார். உடனடியாக அந்த மையம் தொடங்குவதற்கான ஆணையை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு பெற்று அந்தத் தோழியரின் வீட்டுக்கே சென்று அளித்திருக்கிறார்.

மருத்துவம் சார்ந்த பணிகள் தடைபெற்று நின்றுவிடக் கூடாது என்பதற்காக பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இத்தண்டுவடம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவோருக்கு 18 வகையான பொருள்கள் அடங்கிய கிட் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்தால் மீண்டும் அவர்களுக்கு வழங்கப்படுவதற்கு ஏற்பாடுகள் தொடங்கப்படும்.

தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு

கருப்பு பூஞ்சைக்கென பிரத்யேக வார்டுகள்:

கருப்பு பூஞ்சை நோயினால் தமிழ்நாடு முழுவதும் 3ஆயிரத்து 929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயினால் 122 பேர் உயிரிழந்துள்ளனர். முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி கருப்பு பூஞ்சைக்கென பிரத்யேக வார்டுகள் திறக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் 7 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நோய் பாதிக்கப்பட்டு அறிகுறிகள் தெரிந்த உடனேயே சிகிச்சைப் பெறுவதற்கு அரசு மருத்துவமனைகளை நாடுபவர்களுக்கு சிறந்த சிகிச்சையளிக்கப்படுகிறது. அவர்களும் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புகின்றனர். இந்நோய்க்கான ஆம்போடெரிசின், பொசகொனோசோல் போன்ற மருந்துகள் தேவையான அளவில் கையிருப்பில் உள்ளன. தனியார் மருத்துவமனைகளுக்குத் தேவையென இணையதளம் மூலம் தொடர்புகொண்டால் அவர்களுக்குத் தேவையான மருந்துகளும் அனுப்பி வைக்கப்படுகின்றன" என்றார்.

இதையும் படிங்க: 'பாலைவனமாகும் தமிழ்நாடு' - கொங்குநாடு சர்ச்சை குறித்து கே.என். நேரு ஆவேசம்

சென்னை: சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியிலுள்ள கோட்டூர் ஜிப்ஸி காலனியில் வசிக்கும் நரிக்குறவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் முகாமினை நகர்ப்புற வளர்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், "தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் தடுப்பூசிகள் செலுத்துவதில் மிகப் பெரிய அளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.

விழிப்புணர்வை ஏற்படுத்திய நல்ல நோக்கம் நிறைவேறி இருப்பதால், தமிழ்நாட்டில் இதுவரை 1 கோடிய 62 லட்சத்து 61ஆயிரத்து 985 பேருக்குக் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கையிருப்பில் 7 லட்சத்து 53ஆயிரத்து 280 தடுப்பூசிகள் உள்ளன.

தடுப்பூசி முகாம்:

முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி ஜூலை மாதத்துக்குரிய தொகுப்பினை விரைந்து பெறுவதற்கு சுகாதாரத் துறையின் செயலாளரை டெல்லிக்கு அனுப்பி இரண்டு நாள்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டு, ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை அலுவலர்களைச் சந்தித்து வலியுறுத்தியதால், தமிழ்நாட்டிற்குத் தடுப்பூசிகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியிலுள்ள கோட்டூர் ஜிப்ஸி காலனியில் 200க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வசிக்கின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்குத் தொழில் நிமித்தமாக நரிக்குறவர்கள் சென்றுவருவதால், அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளித்திட வேண்டுமென நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு வலியுறுத்தியதன் அடிப்படையில், அவரது முன்னிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையும், சென்னை மாநகராட்சியும் இணைந்து தடுப்பூசி முகாமை இப்பகுதியில் தொடங்கியுள்ளது.

தடுப்பூசி முகாம்
தடுப்பூசி முகாம்

33 மாவட்டங்களில் கள ஆய்வு:

தமிழ்நாடு முழுவதும் இருக்கிற மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நானும், சுகாதாரத் துறையின் செயலாளரும் சென்று கள ஆய்வை நடத்தியிருக்கிறோம். மருத்துவமனைகளில் இருக்கக்கூடிய டயாலிசிஸ், கார்டியோலாஜி போன்ற பிரிவுகளுக்கும் சென்று ஆய்வு செய்துள்ளோம். கரோனா நோயைத் தாண்டி பிற நோய்களுக்கும் சிறப்பான கிசிச்சையளிக்க மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தியிருக்கிறோம்.

முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு நீண்ட நாள்களாகப் படுத்திருந்து புண் வந்து பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு உரிய தீவிர சிகிச்சைகள் அளிக்க அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்துவோம். நேற்றுதான் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க ஓர் ஆராய்ச்சி மையம் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை இத்துறை சார்ந்த மருத்துவத் தோழியரிடமிருந்து வந்துள்ளது.

18 வகையான பொருள்கள் அடங்கிய கிட்:

அங்கு மருத்துவக் கல்லூரி இயக்குநர், பொதுச்சுகாதாரம், நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் ஆகியோரிடமும் அரசு மருத்துவமனையோடு சேர்ந்து இயங்குவதற்கான அவரது விருப்பத்தினைத் தெரிவித்தார். உடனடியாக அந்த மையம் தொடங்குவதற்கான ஆணையை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு பெற்று அந்தத் தோழியரின் வீட்டுக்கே சென்று அளித்திருக்கிறார்.

மருத்துவம் சார்ந்த பணிகள் தடைபெற்று நின்றுவிடக் கூடாது என்பதற்காக பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இத்தண்டுவடம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவோருக்கு 18 வகையான பொருள்கள் அடங்கிய கிட் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்தால் மீண்டும் அவர்களுக்கு வழங்கப்படுவதற்கு ஏற்பாடுகள் தொடங்கப்படும்.

தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு

கருப்பு பூஞ்சைக்கென பிரத்யேக வார்டுகள்:

கருப்பு பூஞ்சை நோயினால் தமிழ்நாடு முழுவதும் 3ஆயிரத்து 929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயினால் 122 பேர் உயிரிழந்துள்ளனர். முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி கருப்பு பூஞ்சைக்கென பிரத்யேக வார்டுகள் திறக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் 7 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நோய் பாதிக்கப்பட்டு அறிகுறிகள் தெரிந்த உடனேயே சிகிச்சைப் பெறுவதற்கு அரசு மருத்துவமனைகளை நாடுபவர்களுக்கு சிறந்த சிகிச்சையளிக்கப்படுகிறது. அவர்களும் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புகின்றனர். இந்நோய்க்கான ஆம்போடெரிசின், பொசகொனோசோல் போன்ற மருந்துகள் தேவையான அளவில் கையிருப்பில் உள்ளன. தனியார் மருத்துவமனைகளுக்குத் தேவையென இணையதளம் மூலம் தொடர்புகொண்டால் அவர்களுக்குத் தேவையான மருந்துகளும் அனுப்பி வைக்கப்படுகின்றன" என்றார்.

இதையும் படிங்க: 'பாலைவனமாகும் தமிழ்நாடு' - கொங்குநாடு சர்ச்சை குறித்து கே.என். நேரு ஆவேசம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.